மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 165 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை(9) காலை விடுத்துள்ள கொரோனா தொற்று நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 8 நாட்களில் 165 கொரோனா தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இவ் வருடம் மன்னார் மாவட்டத்தில் 1832 தொற்றாளர்களும்,தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 1849 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 22 கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்